மோடியின் பதவியேற்பு – புது டில்லியில் தரையிறங்கினார் ரணில்…!

0 1

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்  பதவியேற்பு நிகழ்வுக்கென  இந்தியா நோக்கி பயணித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதுடெல்லியை சென்றடைந்துள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக ஜனாதிபதி இந்தியா நோக்கி பயணித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வு  புதுடெல்லியில் இன்று (09) மாலை நடைபெறவுள்ளது.

தனது பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு, பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை அடுத்தே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதுடெல்லி நோக்கி பயணித்துள்ளார்.

இந்திய பிரதமரின் பதவியேற்பு நிகழ்வின் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.